• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

‘சொந்த அமைச்சகத்திலே ரூ.99 லட்சம் மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு’ – மத்திய வேளாண் இணை அமைச்சரின் விளக்கம் என்ன?

Byadmin

Jun 28, 2026


மத்திய வேளாண் இணை அமைச்சர் பாகிராத் சௌதரி, மானிய ஊழல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு பாஜக கிசான் மோர்ச்சாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜ்மெர் எம்பி பாகிராத் சௌதரி டிராக்டரில் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய வேளாண் இணை அமைச்சர் பாகிராத் சௌதரி தனது சொந்த அமைச்சகத்தில் இருந்து வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் குடைமிளகாய் பயிரிடுவதற்காக ரூ.99 லட்சம் வரை மானியம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

தான் ஒரு பசுமைக்குடில் (பாலிஹவுஸ்) நிறுவி 8 ஆண்டுகளுக்கு முன்னர் மானியத்திற்காக விண்ணப்பித்ததாகக் கூறும் அவர், “நான் எதையும் ரகசியமாகச் செய்யவில்லை.” என்றும் தெரிவித்தார்.

ராஜஸ்தானின் அஜ்மெர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக பாகிராத் சௌதரி உள்ளார். அவர் விளக்கமளித்த பிறகும் இந்தச் சர்ச்சை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது.

இந்த விவகாரத்தையொட்டி அரசாங்கத்தைக் குறிவைத்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலோட் இதனை ஒரு புதிய வடிவிலான ஊழல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களிலும் இது விவாதப் பொருளாகியுள்ளது. எழுத்தாளர் சாப நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், “வெள்ளரிக்காய், தண்ணீர், காடு, நிலம் என அனைத்திலும் ஊழல். அது எல்லாவற்றிக்கும் மேலாக நெய், நகைகள், கோயில் நன்கொடைகள் என அனைத்திலும் ஊழல். அவமானத்திலும் தலைகுனிய வேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

By admin