• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

ஜின்னா உடல்நிலை பற்றி அறிந்திருந்தால் நேருவும் காந்தியும் இந்திய பிரிவினையை தடுத்திருப்பார்களா?

Byadmin

Aug 20, 2026


முகமது அலி ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா

    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

வெள்ளை நிற வட்டங்கள் இரண்டு கருப்பு நிற வட்டப் புள்ளிகளைச் சுற்றியிருந்தன. அவை ஒவ்வொன்றும் டேபிள் டென்னிஸ் பந்தைவிட சற்று பெரியதாக இருந்தன. மேலும், நுரையீரல் முழுவதும் பரவியிருந்த வெள்ளைப் புள்ளிகளும், காசநோய், நுரையீரலை மெல்ல மெல்ல அழித்து வந்ததைக் காட்டின.

இது பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் நுரையீரல் எக்ஸ்-ரே.

லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாப்பியர் ஆகியோர் தங்களது ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ புத்தகத்தில், “1946ஆம் ஆண்டு ஜூன் மாதம், பம்பாயைச் சேர்ந்த மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேலும், கதிரியக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜல் டெபூவும் இந்த எக்ஸ்-ரேவைப் பார்த்த பிறகு, நோய் எந்த அளவுக்கு முற்றியிருந்தது என்பதைப் புரிந்துகொண்டனர். ஜின்னா இன்னும் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிந்தனர்” என்று எழுதுகின்றனர்.

“ஆனால், ஜின்னாவின் வேண்டுகோளின்படி, இரு மருத்துவர்களும் இந்த அறிக்கையை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டனர்.”

பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு 79 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரு பார்சி மருத்துவர்களும் தங்களது “அமைதியான ஆனால் அசாதாரணமான சேவைக்காக”, அந்த நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘நிஷான்-இ-குவைத்-இ-ஆசம்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

By admin