• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க புதிய கட்டுப்பாடு என்ன?

Byadmin

Sep 20, 2026


விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன்பாக தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறுவது கட்டாயம் என சென்னையில் அமைந்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளையும் மாநில மற்றும் தேசிய அளவிலான வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்று தெரிவிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

விநாயகர் சதுர்த்தி, சிலைகள் கரைப்பு

பட மூலாதாரம், Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

வழக்கின் பின்னணி என்ன?

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

By admin