மாநகராட்சியின் வேண்டுகோள்
கடைசி நேர நெரிசலையும், தாமதக் கட்டணங்களையும் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (செப்டம்பர் 30-க்குள்) தங்களது வரிகளைச் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணமே மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.