• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

பெற்றோரின் நிதி பாரபட்சம் உடன்பிறப்புகளை எப்படிப் பாதிக்கிறது? பணத் தகராறுகளை தீர்க்க 7 வழிகள்

Byadmin

Aug 31, 2026


உடன்பிறப்புகளுக்கு இடையேயான பணம் தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டேனியல் தாமஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உங்கள் பெற்றோருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று ஒருவரை நினைத்து, அவருக்கே அதிக பணம், பரிசுகள் அல்லது உதவிகளை வழங்குகிறார்களா?

பெற்றோரின் நிதி சார்ந்த பாகுபாடு, உடன்பிறப்புகளுக்கிடையே பொறாமை மற்றும் மனக்கசப்பை ஏற்படுத்துவதோடு, அது பெரியவர்களாக ஆன பிறகும் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சில சமயங்களில், பெற்றோர் இறந்த பிறகு சட்ட ரீதியான பிரச்னைகளுக்கும் இது வழிவகுக்கலாம். ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க சில வழிமுறைகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனது துணையுடன் பிரிந்த பிறகு வீடு வாங்குவதற்கான முன்பணத்தில் உதவியாக 10,000 பவுண்டுகள் கடனாக கேட்டபோது, தனது பெற்றோர் அதை வழங்க மறுத்துவிட்டனர் என ஜான் கூறுகிறார். தனது இளைய சகோதரருக்கு எப்போதும் பெற்றோர் ஆதரவாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

அவர்களின் நிதி நிலையைப் பார்த்தால், அந்தத் தொகையை வழங்குவது அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும் என அவர் கூறுகிறார்.

ஆனால், இதற்கு முன்பு அவரது தம்பிக்கு வீடு வாங்குவதற்கான முன்பணத்தை அவரது பெற்றோர் வழங்கியதோடு, அவரது அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கும் நிதி உதவி செய்துள்ளனர்.

By admin