தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டசபையில் முறைப்படியாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்ற நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அதன்பின் வை.கோ.வை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். துரை வைகோ வாசலில் முதலமைச்சர் விஜயை கட்டித்தழுவி வரவேற்றார்.
பின்னர் வை.கோ.வை சந்தித்தார். வைகோ-வும் அவரை கட்டுத்தழுவி வரவேற்றார். பின்னர் வைகோ வீட்டில் உள்ளவர்கள் விஜய் உடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது அவரது வீட்டில் உள்ள பணிப்பெண்களும் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். உடனே வை.கோ. அவர்களை அழைத்தார். முதலமைச்சர் விஜயும் புன்னகையுடன் போட்டோ எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.
அப்போது பணிப்பெண்கள் மிகப்பெரிய ஆனந்தத்துடன் விஜய் அருகில் வந்தனர். அப்போது ஒரு பெண் ஊரார் கண்கள் எல்லாம் முதலமைச்சர் விஜய் மீதுதான் உள்ளது என்பது போன் திருஷ்டி சுற்றினார். அதற்கு விஜயும் அந்த பெண்ணுக்கு அதுபோன்று திருஷ்டி சுற்றினார். ஒவ்வொரு பெண்ணும் அவரை கும்பிட்டு மரியாதை செலுத்த, அவரும் கும்பிட்டார். மேலும் அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இது பார்ப்போரை நெகிழச் செய்தது.