• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்களின் நிலை என்ன?

Byadmin

Jun 29, 2026


வெனிசுவேலா நிலநடுக்கம், வெனிசுவேலா, நிலநடுக்கம், லா குவைரா

பட மூலாதாரம், Diko Betancourt/Anadolu via Getty Images

படக்குறிப்பு, எவ்விதப் பாதுகாப்பும் இன்றி, கிடைத்தவற்றைப் பயன்படுத்தி இடிபாடுகளுக்கு இடையே தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் மக்கள்

    • எழுதியவர், நிக்கோல் கோல்ஸ்டர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
    • இருந்து, La Guaira, Venezuela

    • எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்
    • இருந்து, London
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வெறும் கைகள் மற்றும் மண்வெட்டிகளைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்படுகின்றன; அதேவேளையில், மேலே ஒரு டிரோன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இங்கே ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலும் முக்கியமானது. உயிருடன் இருப்பவர்களை கண்டறிவதற்கான வலிமிகுந்த போராட்டம் இது.

தலைநகர் கராகஸை ஒட்டியுள்ள கடலோர பகுதியான லா குவைராவில் எங்குத் திரும்பினாலும் பேரழிவின் சுவடுகளைப் பார்க்கமுடிகிறது. கடந்த புதன்கிழமையன்று வெனிசுவேலாவை அடுத்தடுத்துத் தாக்கிய நிலநடுக்கங்களால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இந்த மாநிலமும் ஒன்று.

இங்குள்ள குடியிருப்பாளர்களும் குடும்பத்தினரும் தங்களின் அன்புக்குரியவர்களையும் உடமைகளையும் இடிபாடுகளுக்கு இடையே தீவிரமாகத் தேடி வருகின்றனர். கான்கிரீட் மற்றும் உலோகக் கம்பிகளின் சிதைவுகளுக்கு அடியில் யாரேனும் உயிருடன் சிக்கியிருந்தால் வெளிப்படும் சத்தத்தைக் கேட்க அவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கங்களால் இதுவரை குறைந்தது 1,430 பேர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் இரண்டாவது நிலநடுக்கமானது, கடந்த நூற்றாண்டில் வெனிசுவேலாவில் பதிவான மிக வலுவான நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, அந்த இடிபாடுகளுக்கு அடியில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது. சுமார் 50,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

By admin