• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

200 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக நினைத்த பறவை திடீரென மீண்டு வந்தது எப்படி? வியப்பில் விஞ்ஞானிகள்

Byadmin

Jul 26, 2026


'200 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த இனத்தைப் பார்க்கிறோம்': கலபகோஸ் தீவுகளில் மீண்டு வரும் அழிந்த பறவைகள்

பட மூலாதாரம், Carlos Espinosa

இயற்கை வரலாற்றில் சார்லஸ் டார்வின் மிகப்பெரும் புரட்சிக்கு வித்திடக் காரணமாக கலபகோஸ் தீவுக் கூட்டத்திற்கு அவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது ஒரு பறவையைப் பார்த்து, அதன் மாதிரியை பதிவு செய்தார். ஆனால், அதற்குப் பிறகு இரு நூற்றாண்டுகளாக அது காணப்படாமலே போனது. இதனால் அந்தப் பறவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், இப்போது கலபகோஸ் ரயில் பறவை எனப்படும் அந்தப் பறவை மீண்டு வருவதைக் காண முடிவதாக விஞ்ஞானிகள் வியப்புடன் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு, புளோரியானாவில் இருந்து எலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் அகற்றப்பட்ட பிறகு, இந்தப் பறவை மீண்டும் அங்கு தோன்றி இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காணாமல் போன இந்தப் பறவை எப்படித் திரும்பியது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.

ஆபத்தில் இருந்த பிற பறவைகளும் மீண்டு வந்துள்ளன; சில பறவைகள் இதற்கு முன் அந்தத் தீவில் கேட்டிராத புதிய ராகங்களைக்கூட பாடத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பான, வேட்டையாடிகள் இல்லாத சூழல் விலங்குகளை புதிய சோதனைகளைச் செய்யவும், புதுமைகளைப் புகுத்தவும் எப்படி அனுமதிக்கிறது என்பதற்கான புதிய நுண்ணறிவுகளை இந்த மாற்றம் வெளிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

By admin