• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

271 நாட்கள் உடலில் பன்றியின் சிறுநீரகத்துடன் வாழ்ந்த மனிதர் – இப்போதைய நிலை என்ன?

Byadmin

Sep 5, 2026


நோயாளி டிம் ஆண்ட்ரூஸ் (நடுவில்), மருத்துவர் டட்சுவோ கவாய் (இடது), மருத்துவர் லியோனார்டோ ரியெல்லா (வலது)

பட மூலாதாரம், Kate Flock/Massachusetts General Hospital

படக்குறிப்பு, நோயாளி டிம் ஆண்ட்ரூஸ் (நடுவில்), மருத்துவர் டட்சுவோ கவாய் (இடது), மருத்துவர் லியோனார்டோ ரியெல்லா (வலது)

    • எழுதியவர், ஜேம்ஸ் கல்லேகர்
    • பதவி, சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பன்றியிடம் இருந்து மனிதருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், அவரது உடலில் 271 நாட்கள் செயல்பட்டுள்ளது. மனித உடலில் பன்றியின் சிறுநீரகம் செயல்பட்டதிலேயே மிக நீண்ட காலம் இருந்தது இதுவே முதல்முறை என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தனக்கு “நம்பிக்கையை” அளித்ததாகவும், ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக டயாலிசிஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல மாதங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவியதாகவும் டிம் ஆண்ட்ரூஸ் கூறினார்.

அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், மனித சிறுநீரகம் கிடைக்கும் வரை பன்றியின் உறுப்பை ஒரு “பாலமாக” பயன்படுத்த முடியும் என்பதை இந்தச் சிகிச்சை காட்டுவதாகக் கூறுகின்றனர்.

ஆனால், பன்றியின் சிறுநீரகம் இறுதியில் செயலிழந்ததால் அது அகற்றப்பட்டது. அதன் பிறகு, மனித தானதாரரிடம் இருந்து சிறுநீரகம் கிடைக்கும் வரை ஆண்ட்ரூஸ் மீண்டும் சிறிது காலம் டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வேறு உயிரினங்களின் உறுப்புகளைப் பயன்படுத்தும் முறையை, அதாவது வேற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சையை, உறுப்பு பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வழியாக மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.

By admin