ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரியன் பென்னட் 30 ரன்களை எடுக்க, இவருடன் களமிறங்கிய பென் கர்ரென் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இனொசென்ட் கையா 55 ரன்களை எடுத்தார்.
கேப்டன் அதிரடி ஆட்டம்:
பிறகு களமிறங்கிய பிரென்டன் டெய்லர் 9 ரன்களில் ஆட்டமிழக்க பிறகு களமிறங்கிய கிரேக் எர்வின் 59 ரன்களை எடுத்தார். கேப்டன் சிகந்தர் ராசா சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி:
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 8 ரன்களுக்கும், இவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கூப்பர் கனொலி 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பிறகு களமிறங்கிய விக்கெட் கீப்பர், பேட்ட்டர் ஜோஷ் இங்லிஸ் அபாரமாக விளையாடி 103 ரன்கள் (11 பவுண்டரிகள்) எடுத்தார். அலெக்ஸ் கேரி 34 ரன்களும், ஆலிவர் பீக் 19 ரன்களை எடுத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நாதன் எலிஸ் பொறுப்புடன் விளையாடி 44 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
இவரது ஆட்டத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. இதனால் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.