• Mon. Sep 21st, 2026

24×7 Live News

Apdin News

டயானா மறைந்த பிறகு சார்லஸ் தொலைபேசியில் கூறியது என்ன? டயானா சகோதரர் பிபிசிக்கு பேட்டி

Byadmin

Sep 21, 2026


டயானாவின் மறைவுக்குப் பிறகு சார்லஸ் கூறியது குறித்து 'உண்மையைத் தான் சொல்வதாகக் கூறுகிறார் ஏர்ல் ஸ்பென்சர்
படக்குறிப்பு, டயானாவின் மறைவுக்குப் பிறகு சார்லஸ் கூறியது குறித்து ‘உண்மையை தான் சொல்வதாகக் கூறுகிறார் ஏர்ல் ஸ்பென்சர்

தனது சகோதரி இளவரசி டயானா உயிரிழந்த சில நாள்களுக்குப் பிறகு, மன்னர் சார்லஸுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து தான் கூறுவது உண்மைதான் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

புதிதாக வெளியாகவுள்ள தனது புத்தகத்தில், அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, “அவளை நாம் விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பக்கிங்ஹாம் அரண்மனை, “சகோதரர் அல்லது சகோதரியை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மழுங்கச் செய்யலாம். முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கலாம், நினைவுகளையும் மற்றவர்கள் அடையாளம் காண முடியாத வகையில் மாற்றியமைக்கலாம். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இது நிகழலாம் என்பதை மன்னர் அறிந்திருக்கிறார்.” என்று தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பான முதல் நேர்காணலில் பேசிய ஏர்ல் ஸ்பென்சர், “அவர் சொன்ன வார்த்தைகள் அவைதான் என்பதை இங்கே, இப்போதே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.” என்றார்.

அரண்மனையின் அரிதான இந்த அறிக்கை குறித்து அவர் கூறுகையில், “அப்படியென்றால், அவர் கோபமாக இருக்கிறாரா? மிகவும் கோபமாக இருக்கிறாரா? அல்லது அவர் சங்கடமாக இருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

By admin