• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்?

Byadmin

Sep 5, 2026


 நாமல் ராஜபக்ஸ

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நாமல் ராஜபக்ஸ

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் நாமல் ராஜபக்ஸ செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானங்களின் கொள்வனவு நடவடிக்கைகளின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, எதிர் வரும் 18ஆம் தேதி வரை நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல்?

கடந்த 2013ஆம் ஆண்டு ஏயார் பஸ் நிறுவனத்திடம் இருந்து ஆறு ஏ-330 ரக விமானங்களும், 4 ஏ-350 ரக விமானங்களும் கொள்வனவு செய்யப்பட்டதுடன், நான்கு ஏ-350 ரக விமானங்கள் வாடகை அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரின் மனைவிக்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் பயணத்தை லஞ்சமாக வழங்க அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

By admin