• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

ஜகியா அகமது: எவரெஸ்ட்டில் ஏறிய முதல் ஆப்கானியப் பெண் – தாலிபன்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றியது எப்படி?

Byadmin

May 30, 2026


 ஜகியா என்ற ரிவர் அகமது

பட மூலாதாரம், Sandro Gromen-Hayes

படக்குறிப்பு, தனது வெற்றியின் காரணமாக, தன் நாடான ஆப்கானிஸ்தானில் தனக்கு மிகுந்த ஆதரவு கிடைப்பதாக ஜகியா என்ற ரிவர் அகமது கூறினார்.

    • எழுதியவர், நவீன் சிங் கட்கா
    • பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 30 வயதான ஜகியா, மே 21 அன்று 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து வரலாறு படைத்தார்.

தற்போது ரிவர் அகமது என்று அழைக்கப்படும் மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, தனது அனுபவத்தைப் பற்றி பிபிசியிடம் கூறுகையில், “உலகின் கூரை போல் தோன்றிய இந்த சிகரத்தில் ஏறும் போது நான் மிகவும் சக்திவாய்ந்தவளாக உணர்ந்தேன்” என்றார்.

தனது வெற்றியின் மூலம், வரலாற்றின் மிக இருண்ட காலத்தையும் தாண்டி அவர்கள் வருவார்கள் என்ற செய்தியைத் தனது நாட்டுப் பெண்களுக்குச் சொல்லவேண்டும் என அவர் விரும்புகிறார்.

ரிவர் அகமது இரண்டாவது தாலிபன் ஆட்சியின் போது தப்பித்து, பின்னர் இந்தியாவுக்கும், அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும் சென்றார்.

By admin