• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி சிஜேபி போராட்டம் பற்றி பாகிஸ்தான், வங்கதேச ஊடகங்கள் கூறுவது என்ன? ஒரு தொகுப்பு

Byadmin

Jul 24, 2026


நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, இளைஞர் அமைப்பான 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • எழுதியவர், பிபிசி மானிடரிங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவில் கல்வியில் சீர்திருத்தம் செய்ய கோரி இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் குறித்து பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, இளைஞர் அமைப்பான ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (சிஜேபி) டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் அரசிடம் முன்வைத்துள்ளனர்.

ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற சிஜேபி-ன் நாடாளுமன்ற பேரணிக்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.

டெல்லியில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். அந்தப் போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் நிறைந்திருந்தனர் . அவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியது.

By admin